செவ்வாய், 22 செப்டம்பர், 2009

meditationofsathuragiri

இவர் தான் சிவவாக்கியர் இவர் மற்று உள்ள சித்தர்கள் பற்றிய வரலாறு பின் வரும் தொடர்களில் நாம் அறியலாம் .
சதுரகிரியில் தியானம் என்பது இமையத்தில் தியானம் பண்ணுவதை போன்று மன அமைதியை தரும் . நமது அன்பர்கள் தியானம் மேல்நிலைதியானம் பயிண்டறவர்கள் வாருங்கள் எம்பெருமான் உள்ள இடம் எவ்வளுவு அமைதி என்று தியானம் பண்ண வருபவர்கள் உணர்ந்து கொள்வீர்கள் .


தியானம் பண்ண வேண்டும் எண்ணத்துடன் வருபவர்களுக்கு கவனிக்க வேண்டியவை .



1.விழாக்காலங்களில் வருவதை தவிர்க்க வேண்டும் . ஏன் என்றால் விழா காலங்களில் மக்கள் பெரும் கூட்டத்துடன் வருவார்கள் . அதுவும் ஆடி அம்மாவசை அன்று மட்டும் சுமார் நான்கு லட்சம் பக்தர்கள் இறைவனின் தரிசனத்திற்கு வரிசையில் நின்றனர் . அது போன்ற நாட்களை தவிர்ப்பது நல்லது .
2.அதே போல் மாதம் மாதம் வரும் பௌர்ணமி அல்லது அம்மாவாசை மற்றும் பிரதோச காலங்களில் கொஞ்சம் கூட்டம் இருக்கும் . மற்ற நாள் கலீல் கூட்டம் இருக்காது . அப்பொழுது வந்தால் தியானம் செய்ய இலகுவாக இருக்கும் . சுவாமியின் முன்னாடி மணிகணக்கில் இருந்து தவம் பண்ணலாம் . மற்ற நாள்களில் மக்களில் வருகையால் சிறிது சல சல ப்பாக இருக்கும் .

3.அம்மாவாசை முடிந்த பின் மூன்று நாள் கல் கழித்து கூட்டம் குறைவாக இருக்கும் . பௌர்ணமி முடிந்தும் மூன்று நாள் கல் கழித்து கூட்டம் குறைவாக இருக்கும் . அப்பொழுது தியானம் பண்ணுவதற்கு ஏற்ற காலங்கள் . ஆனால் கவனிக்க அபொழுது சுவாமிக்கு விழகாலன் போல சிறப்பான பூஜை இருக்காது. ஆனால் நான்கு கால பூஜைகள் எப்பொழுதும் உண்டு .

4.தியானம் பண்ண வரும் அன்பர்கள் யாராக இருந்தாலும் கவனிக்க வேண்டிய ஒன்று கூட்டம் அதிகம் இல்லாத சமயங்களில் வரும் நாம் நமது உடமைகளை தக்க பாதுகாப்பான இடத்தில் தான் வைக்க வேண்டும் . சில வருடங்களுக்கு முன்பு வரை திருட்டு என்பது மகா லிங்கத்திடம் இல்லை . ஆனால் தற்சமயம் மட்டும் ஏனோ சில அன்பர்கள் அடுத்தவர்கள் பொருகளின் மேல் தங்களின் கவனத்தை திருப்பி உள்ளார்கள் . தவறுதான் என்ன செய்ய மக்கள் அதிகம் வரும் பொழுது நிறைய அன்பர்கள் தங்களது பகட்டை காட்டிக்கொள்ள அவர்கள் கொண்டு வரும் . செல்போன் இம்போர்ட் டார்ச் லைட் போன்றவைகளின் மேல் ஈர்க்கப்பட்டு திருட்டுகளில் இறங்கிவிடுகிறார்கள் . ஏன் என்றால் அவர்கள் கிராமபுரத்தில் உள்ளவர்கள் . இதையெல்லாம் கண்டு இருக்க மாட்டார்கள் . இவையெல்லாம் கண்ட பிறகு ஆசையென்னும் பேய் அவர்களயும் பிடித்து கொண்டு திருட்டு போன்ற துணிகர செயல்களில் ஈடுபட வைத்து விடுகிறது . யாராக இருந்தாலும் திருட்டு என்ற குணம் உள் நுழைந்தால் கஷ்டம் அவர் கலை கடவுள் காப்ற்றுவது. அதே சமயம் . இன்னொரு விஷயம் நாமும் பாதுகாப்போடு இருபது முக்கியம் அல்லவா நண்பர்களே .

கருத்துகள் இல்லை: