சனி, 19 செப்டம்பர், 2009

சதுரகிரி செல்லும் பொழுது என்ன தேவை

சதுரகிரியில் நாம் தங்குவதற்கு மற்றும் உணவு மற்றும் கையில் என்ன என்ன எடுத்துகொள்ளலாம் .



முதலில் ஒருநாளில் தரிசனம் முடிக்கும் அன்பர்களுக்கு சிறு அறிவுரை அவர்கள் எடுத்துக்கொள்ளும் பொருட்கள்
தண்ணீர் குறைந்த பட்சம் மூன்று லிட்டர்

அதிகம் நடை பயணம் கொள்ளாதவர்கள் குளுகோஸ் பாக்கெட் கட்டாயம் எடுத்து கொள்ளவேண்டும் .

ஆப்பிள் போன்ற பழவகைகள் எடுத்துகொள்ளலாம்


அதிக நடைபயம் மேற்கொள்ளதவர்கள் எட்டு கிலோ மீட்டர் மலை மேல் ஏறும் பொழுது கொஞ்சம் கெண்டை கால் வலி உடல் வலி ஏற்படும் .

இந்த உடல் வலியோ அல்லது கால் வலியோ ஒன்றும் செய்யாது .


ஆனால் சிலர் முடியவில்லை என்பர் அவர்களுக்கு தேவை என்றால் பெயின் கில்லர் மாத்திரைகள் எடுத்து கொள்ளலாம் .

மட்டறபடி ஏதும் தேவை இலலை


என் என்றால் மூலிகை வனத்து காற்றை சுவசிதாலே போதும் . புது தெம்பை உணர்வீர்கள் . பிஸ்கட் பாக்கெட் சிலதை போட்டு கொள்ளுங்கள் .

மலை ஏறும் பொழுது பசி எடுத்தால் அதை வைத்து சமாளித்து கொள்ளலாம்.





அடுத்து இரண்டு அல்லது மூன்று நாள் தங்கும் அன்பர்கள் கையில் சால்வை . அல்லது இலகு ரக பெட்ஷீட் களை கொண்டு செல்லலாம் .


மலை ஏறும் பொழுது கவனிக்க வேண்டியவை ஆண்கள் சார்ட்ஸ் பனியன் மட்டும் போதும் . ஏன் என்றால் மலை ஏறும் பொழுது அதிகமா வியர்த்து கொட்டும் . அப்படி வியர்த்து கொட்டும் பொழுது நமது வியர்வை துவாரங்கள் வழியாகவும் . அங்கு உலவும் மூலிகை காற்று நமது மேனியினுள் செல்லும். அடிஎடுன்டைய தாழ்மையான கருத்து . ஆண்கள் வேட்டிகட்டிக்கொள்வது ரொம்பவும் நல்லது .ஒரு துண்டை மேனியில் போர்த்தி கொண்டு மலை ஏறலாம்.





சரி மேலே குளிப்பதற்கு வசதிகள் உள்ளனவா . உண்டு சவர் கூட போட்டு வைத்து இருக்கிறார்கள் .
உணவு அங்கு கிட்டத்தட்ட ஐந்து கும் மேற்பட்ட அன்னதான மடங்கள் உள்ளன . அவற்றுள் எனக்கு தெரிந்து மூன்று மடங்கள் . எப்பொழுதும் செயல் படுகிறது . மற்றவை திருவிழா மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்க படுகிறது



அவற்றுள் கஞ்சி மடம் ரொம்பவும் புகழ் பெற்றது . இக்கஞ்சி மடத்திற்கு பொறுப்பாளராக இருந்து அதை நிறுவியவர் . ஸ்ரீ ல ஸ்ரீ காளிமுத்து ஸ்வாமிகள் இவர் தற்போது இல்லை. ஆனாலும் அதை வழி நடத்து பவர்கள் அவரை போலவே சிறப்பாக நடத்துகிறார்கள் . கஞ்சி மடத்தின் தொலைபேசி என்:-


04563325433 .


பக்தர்கள் அங்கு இலவசமாக உணவு எடுத்துகொள்ளலாம் நமது வீட்டை விட இதமானஉபசரிப்புடன் உணவு வழங்குவார்கள் . முகசுளிப்புஅங்கு நாம் காண முடியாத ஒன்று . அந்த அன்புஉபசரிப்புகே நாம் மயங்கித்தான் ஆக வேண்டும் . ஆனால் அவர்கள் சொல்லும் ஒரு வாக்கியம் உண்டுஅய்யா பசிக்கும் மட்டும் தான் உணவு உண்டு . ருசிக்கு இல்லை . எவ்வளவும் வேண்டுமானாலும்வாங்கி சாப்பிடுங்கள் ஆனால் உணவை மீதம்வைத்து மட்டும் வீணாக்கி விடாதீர்கள் . என்றுமட்டும் சொல்வார்கள் . நம் சிவனை நினைத்துஉணவை உண்டால் அது தேவாமிர்தத்தை விடசுவையாக இருக்கும் .


குளிர் காலங்களில் கொஞ்சம் குளிராக இருக்கும் அங்கு தங்குவதற்கு மடங்கள் உண்டு . கவலை இல்லை ஆனால் நமது வீடு போல வசதி இருக்காது .
பழமொழி ஒன்று எனக்கு என் கவனதிக்கு வருகிறது . "பசி ருசி அறியாது . நித்திரை சுகம் அறியாது " என்று சொல்வார்கள் அது உண்மையில் சதுரகிரியில் நடக்கும் . காரணம் மலை ஏறி வரும் நமக்கு ஏற்படும் கடும் பசியில் ருசியான உணவை பார்ப்பது இல்லை . அதுபோல மலை ஏறி வந்த களைப்பில் நல்ல வசதியான இடம் தன் எனக்கு வேண்டும் தூங்குவதற்கு என்று நமது உடல் பார்ப்பதில்லை
தூக்கம் நம்மை தழுவி கொள்கிறது . நம்மை அறியாமலே . பலர் நிம்மதியான தூக்கம் ந என்னனே தெரியாது
ஆனால் அங்கு வாருங்கள் நிம்மதி என்ன என்பதை உணர்வீர்கள் .
.

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

சதுரகிரி ஊஞ்சல் கருப்பு சுவாமி செல்லும் வழி .

சதுரகிரி சந்தன மகா லிங்கத்தின் சந்நிதியின் நேர் செல்லும் ஒற்றையடி பாதையின் வழியாக நாம் செல்ல வேண்டும் . சரியா ஒன்னரை கிலோ மீட்டர் cசென்றவுடன் . வன பத்ரா காளியம்மன் கோவில் வரும் . இந்த வழி முதலில் ஆரம்பிப்பது சந்தன மகாலிங்கத்தின் சந்நிதியின் நேர் எதிர் பாதை . இது சாப்டூர் வாழை தோப்பு செல்லும் பாதையும் கூட ஆனால் ஒரு ௨ கிலோ மீட் தூரத்தில் பாதை பிரிந்து ஊஞ்சல் கருப்பு இருக்கும் இடத்திருக்கு சென்றுவிடும் . ஆதலால் மக்கள் வழி காட்டி இல்லமால் அங்கு செல்ல வேண்டாம் . என்று அறிவுறுத்த படுகிறது . சரி வன பத்திர காளியம்மனை வழி பட்டு பயணத்தை தொடர்ந்தூம் என்றால் சரியாக ஒரு கிலோ மீட்டர்
சென்றவுடன் வாழை தோப்பு செல்லும் பாதையிலிருந்து அடர்ந்த வனத்துக்குள் சிறய ஒற்றாடி பாதை என்று கூட சொல்ல முடியாது . அவ்வளவு சிறியதாக இருக்கும் . அதன் வழியேஇரண்டு கிலோ மீட்டர் நடந்தால் ஊஞ்சல் கருப்பு இருக்கும் இருக்கும் இடத்தை அடையலாம் . ஊஞ்சல் கருப்பு இருக்கும் இடம் பெரிய சந்நிதி ஒன்றும் அல்ல . ஒரு பெரிய மரத்தின் அடியில் ஊஞ்சல் கருப்பு இருக்கிறார் . மரமும் ஒரு கற்பக விருச்சம் போன்றதுதான் .சரியான அடர்ந்த வானம் ஆகும் ஊஞ்சல் கருப்பு இருக்கும் இடம் இவரும் சதுரகிரி இன் காவல் தெய்வம் ஆவார்
ஊஞ்சல் கருப்பு மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருத படுகிறார் . அவர் முன் அமர்ந்து தியானம் செய்தால் கேட்டது கிடைக்கும் . இது அங்கு அவர் முன் அமர்ந்து தியானம் செய்தவர் சொன்னது .

எனக்கு வலை பதிவில் சிறு உதவி தேவை

கணினி தொழில் நுட்பம் தெரிந்த அன்பர்கள் என்னுடைய வலை பதிவை பலரின் பார்வையில் படுமாறு செய்ய வேண்டும் . ஏன் என்றால் பல அன்பர்கள் கோவில் மலை அடிவாரத்தில் வந்து தடுமாறுகிறார்கள் . சார் எப்டி போறது என்ன பண்றது . வழி புரியவில்லை சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள் . அங்கு மலை அடிவாரத்தில் ஒரு சில விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்கள் ஒருத்தரும் இருக்க மாட்டார்கள் .


அதனால் தான் இதை படித்து தெரிந்த கொண்ட அன்பர் நேராக கோவில்க்கு சென்று விடலாம் .

பலரின் பார்வையில் இருந்ததால் தான் அவர்களுக்கும் இப்படி ஒரு இலவச வழி காட்டி இருப்பதும் தெரியும் .

விஷயம் தெரிந்த அன்பர்கள் உதவலாம். சித்தம் சிறக்க சிவ தொண்டே சிறந்த வழி



எனது கைபேசியையும் அழைக்கலாம் .9944494045 9976642060- prabakar

சதுரகிரி ஒரு மூலிகை வனம்


சதுரகிரி ஒரு மூலிகை வனம் என்பதில் ஐயம் இல்லை . அதற்கு சிறு உதாரணம் போதும் என்று நினைக்கிறேன் . ரெட்டை லிங்கம் சந்நிதி தாண்டிய வுடன் நாவல் ஊற்று என்ற இடம் உள்ளது . அந்த ஊற்றில் உள்ள நீரை பருகினால் நீரின் தன்மை கொஞ்சம் துவர்ப்பு உடையதாக இருக்கும் . ஆனால் சுவையாகவும் இருக்கும். அந்த தண்ணியை தொடர்ந்து பருகினால் சர்க்கரை வியாதி ஓடி ஒளிந்து கொள்ளும் . இது எப்படி சாத்தியம் என்று நினைப்பு உங்கள்கு ஓடும் . இதோ விளக்கம் தருகிறேன் கூடவே . அங்கு உள்ள நாவல் மரத்து அடியில் ஊற்று உள்ளது நாவல் மரம் நூற்றாண்டை சேர்ந்தது .
நாவல் மரத்து அடியில் உள்ள ஊற்றின் நீர் அம்மரத்தின் வேரிலிருந்து கசிகிறது . நாவல் மரத்தின் துவர்ப்பு தன்மையை அந்த நீர் பெற்று வருகிறது . அதுவே சக்கரை வியாதி முதல் இன்னும் சில வியாதிகளையும் கட்டு படுத்தும் .
அது போல அங்குள்ள கோரக்கர் தீர்த்தம் குளிராட்டி தீர்த்தம் போன்ற தீர்த்தம் மும் பல மூலிகை வேர் ,இலை ,தலை, இவற்றின் ஊடே பட்டு வருவதால் அது மூலிகை தீர்த்தமாக மாறுகிறது . நாம் அதில் குளிக்கும் பொழுது நமக்கும் அது பல வியாயதிகளை கட்டு படுத்திகிறது . இதற்கு மேல் அங்கு உள்ள மூலிகை விசயங்களை சொல்ல எனக்கு அனுமதி இல்லை மன்னிக்கவும் வலை அன்பர்கள் .