வணக்கம் ஆன்மீக அன்பர்களே ,. எனது இடைவெளிக்கு மன்னிக்கவும் . காரணம் நான் வேலை மற்றும் சதுரகிரி பயணங்கள் என்று இடையறாது வேலையின் காரணமாக சரியாக பதிவில் ஏதும் இட முடிய வில்லை ,. கடந்த இரண்டு மாதங்களில் குறைந்த பட்சம் ஒரு பத்து தடவையாவது சதுரகிரி சென்று இருப்பேன் ,.
மிகவும் இனிமையான தருணங்கள் மற்றும் பயணங்கள் ,. உண்மையில் பலதர பட்ட ஆன்மீக அன்பர்களுடனும் ஆன்மீக தேடலுடனும் எனது பயணம் தொடங்கியது ,. மூன்று நாடுகளில் இருந்து எனக்கு மின் அஞ்சல் மூலமாக அழைப்பு வந்தது ,. என்னுடன் கண்டிப்பாக நீங்கள் வர வேண்டும் என்று சரி என்று நானும் அவர்களுடன் சென்றேன் ,. அமெரிக்க பிரஜையான சுரேந்திரன் மற்றும் அவர் மனைவியுடனும் லண்டன் இருந்து சுதா சக்திவேல் மற்றும் மலேசிய வில் இருந்து கைலை பாலா மற்றும் அவருடைய நண்பர்கள் அவர்களுடனும் ,.
கடைசியாக நண்பர் முத்துகுமார் திருச்சி இல் இருந்து அவருடனும் சென்று இருந்தேன் ,.
இந்த பயணங்கள் எல்லாம் மிக அருமையான தருணங்கள் ,. அதிலும் குறிப்பாக மலேசிய நண்பர் கைலை பாலா அவர்களுடன் சென்றது மறக்க முடியாத அனுபவம் ஆகும் ,. அவர்களுடன் நான்கு நாட்கள் தெரிய வில்லை
இவர்களுடன் நான் சென்ற பயணங்களை மறக்க முடிய வில்லை ,. மற்றும் பயணத்தின் சுவை குறையாமல் கட்டாயமாக வரும் பதிவில் இடுகிறேன் ,.
இதில் முக்கியமான ஒன்று நான் கன்னியாகுமரி சென்று ஸ்ரீ செல்வராஜ் குருவிடம் உபதேசம் வாங்கியது ,. இதற்கு மாபெரும் உறுதுணை திருப்பூர் சங்கர் அவர்கள் எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக பதிவில் இடுகிறேன் ,. மன்னிக்கவும் நண்பர்களே தற்பொழுதும் என்னால் பனியின் சுமை காரணமாக அதிகம் பதிவில் இட முடிய வில்லை
Astrology: மகிழ்ச்சியான மண வாழ்க்கை Happy married life!
1 நாள் முன்பு